பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்... என்னை நீங்க பார்த்துக்கோங்க... கண்கலங்கிய சிம்பு


பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்... என்னை நீங்க பார்த்துக்கோங்க... கண்கலங்கிய சிம்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 5:19 PM GMT (Updated: 19 Nov 2021 5:19 PM GMT)

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, ரசிகர்களிடம் என்னை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்.

Next Story