இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது


இயக்குனர் மணிரத்னத்திற்கு ‘பாரத் அஷ்மிதா’ விருது
x
தினத்தந்தி 3 Feb 2022 6:14 PM GMT (Updated: 3 Feb 2022 6:14 PM GMT)

தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னத்திற்கு சிறந்த பங்களிப்பிற்கான ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்படுகிறது.

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அதன்படி இந்த வருடம், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, இயக்குனர் மணிரத்னத்திற்கு வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி இணைய வழியில் ‘பாரத் அஷ்மிதா’ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Next Story