வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை:
வெளிநாட்டு செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது.
செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கு ரூ.3.47 கோடி பெற்ற ஊதியத்திற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.இதற்கு ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Related Tags :
Next Story