சீராக குடிநீர் வழங்க கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


சீராக குடிநீர் வழங்க கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jun 2018 10:45 PM GMT (Updated: 11 Jun 2018 9:43 PM GMT)

சீராக குடிநீர் வழங்கக்கோரி துறையூர் நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

துறையூர்,

துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்். இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள துறையூர்-பெரம்பலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக துறையூர்-பெரம்பலூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Next Story