செல்போன் திருடர்கள் 4 பேர் கைது


செல்போன் திருடர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2018 10:59 PM GMT (Updated: 23 Aug 2018 10:59 PM GMT)

புனேயில் செல்போன் திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே,

புனே ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று ரெயில்வே போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக்கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பயணிகளிடம் செல்போன், நகைப்பறிப்பில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த வாலிபரின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பிடிபட்ட 4 பேரின் பெயர்கள் விக்கி (வயது 21), ராகுல் (19), அசோக் (22), தீபக் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் மற்றும் ஒரு தங்கச்சங்கிலி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story