திருட்டு வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது - வாலாஜாவை சேர்ந்தவர்கள்
திருட்டு வழக்கில் வாலாஜாவை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி,
ஆரணி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்தது. இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா சாத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 25), பெரியதாங்கல் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (48) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஆரணி, ஆற்காடு, வேலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சத்யா, கருணாகரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
ஆரணி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்தது. இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா சாத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 25), பெரியதாங்கல் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் (48) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது ஆரணி, ஆற்காடு, வேலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சத்யா, கருணாகரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story