சேலம் செவ்வாய்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை திருட்டு


சேலம் செவ்வாய்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 29 March 2019 10:00 PM GMT (Updated: 29 March 2019 8:17 PM GMT)

சேலம் செவ்வாய்பேட்டையில் ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை திருட்டு போனது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டை சின்னமாறன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 42). இவர், மேட்டுப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை அவர் வெளியில் சென்றுவிட்டார். அப்போது, வீட்டின் அருகே உள்ள உறவினர் ஒருவர், ராஜேஸ்வரிக்கு போன் செய்து, வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் சென்றுபார்த்தபோது, மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story