குடிநீர் பிரச்சினையை தீர்க்க தி.மு.க. ஆட்சியில் தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க தி.மு.க. ஆட்சியில் தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தவில்லை தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jun 2019 11:00 PM GMT (Updated: 30 Jun 2019 8:40 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க தி.மு.க. ஆட்சியில் தொலைநோக்கு திட்டம் செயல்படுத்தவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

செம்பட்டு,

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பது நல்ல திட்டம். இந்த திட்டத்தை 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் தொடங்கி வைத்தது. இன்று அந்த கூட்டணியில் உள்ள வைகோ உள்ளிட்டோர் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். வைகோ போன்றவர்கள் எதிர்த்தாலே அந்த திட்டம் நல்ல திட்டம் தான். மத்திய அரசு செயல்படுத்தும் எல்லாவற்றையும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அத்தகைய எதிர் விமர்சனங்களை நாங்கள் முறியடிப்போம்.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை இயக்கமாகவே நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீர் பிரச்சினை விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து கிரண்பெடி கருத்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. குடிநீர் பிரச்சினை குறித்து பேச தி.மு.க.விற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவர்கள் ஆட்சியில் இருந்த போது எந்த தொலைநோக்கு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திய தி.மு.க. ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து வரக்கூடாது என கூறுவதன் மூலம் மாவட்டங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறார். அவர் புலி அல்ல, பூனையாக தான் தெரிகிறார்.

தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்க கூடாது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் வரும்போது தண்ணீர் பிரச்சினை இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story