காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 5:43 PM GMT)

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.

திருப்பூர்,

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், காஷ்மீரில் 370–வது பிரிவை நீக்கியதை கண்டித்து மாவட்ட செயலாளர் ரவி பேசினார். காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பழனிசாமி, சேகர், செந்தில், வடிவேல், காட்டே ராமசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story