காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது


காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 6:48 PM GMT)

நாகை அருகே காரில் கடத்தப்பட்ட 716 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

திட்டச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை மெயின் ரோட்டில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. இந்த காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை நடத்தினர்.

கைது

சோதனையில் காரில் அட்டைப்பெட்டிகளில் 716 மதுபாட்டில்கள் இருந்தன. உடனே போலீசார் காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, தன்மார் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் மகேஸ்வரன் (வயது25) என் பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் கடத்த பயன்படுத்திய காரை பறி முதல் செய்தனர்.


Next Story