விக்கிரவாண்டி அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


விக்கிரவாண்டி அருகே, ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 28 Oct 2019 9:30 PM GMT (Updated: 28 Oct 2019 9:52 PM GMT)

விக்கிரவாண்டி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக செத்தார்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா கஸ்பாகாரணை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 49), இவர் சென்னையில் உள்ள ரெயில்வே ஒப்பந்த நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்து வேலைக்காக ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டு சென்ற பழனி மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் அன்று விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் ரெயில்வே பாதையில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பழனி ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்ததில் இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிக்கு சித்ரா என்ற மனைவியும், பார்த்திபன், திவாகர் என்ற 2 மகன்களும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

Next Story