பெரம்பலூர் அருகே தி.மு.க.வேட்பாளரிடம் கட்சி துண்டுகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


பெரம்பலூர் அருகே தி.மு.க.வேட்பாளரிடம் கட்சி துண்டுகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 4:29 PM GMT)

பெரம்பலூர் அருகே தி.மு.க. வேட்பாளரிடம்கட்சி துண்டுகளை தேர்தல்பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்,

தேர்தல் நடத்தைவிதிமுறைகளை கண்காணிக்கபெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்,வேப்பந்தட்டைஆகிய ஊராட்சிஒன்றியங்களுக்கு சுழற்சிமுறையில் 3 பறக்கும்படை குழுக்களும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சிஒன்றியங்களுக்கு சுழற்சிமுறையில் 3 பறக்கும்படை குழுக்களும்என மொத்தம் 6 பறக்கும்படை குழுக்கள்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும்படை குழுக்களில்இடம்பெற்றுள்ள அதிகாரிகள், போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில்நேற்று பெரம்பலூர்,வேப்பந்தட்டைஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான பறக்கும் படைஅதிகாரி துரைராஜ்,ஆயுதப்படை போலீஸ்ஏட்டு இளங்கோவன் ஆகியோர் நேற்று காலை பெரம்பலூர் அருகேசெங்குணம்ஏரிக்கரை சாலையில்தீவிரவாகன சோதனையில்ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த காரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 4-வதுவார்டு ஊராட்சிஒன்றிய குழுஉறுப்பினர் பதவிக்குதி.மு.க. சார்பில்போட்டியிடும் வேட்பாளர்கலையரசன்என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்துஅவர் வந்த காரில் அதிகாரி, போலீஸ்காரர் சோதனையிட்டனர். அதில் தி.மு.க.கட்சி துண்டுகள்உள்ளிட்ட 123 துண்டுகள் இருந்தன. இதையடுத்துஅந்த துண்டுகளைபறிமுதல்செய்த பறக்கும் படையினர்அதனை பெரம்பலூர்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்உள்ள கருவூலத்தில்ஒப்படைத்தனர்.

Next Story