குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் சர்வதேச சதி இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி


குமரி சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் சர்வதேச சதி இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 8:05 PM GMT)

குமரி சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் சர்வதேச சதி இருக்கிறது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கூறினார்.

களியக்காவிளை,

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்(வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், நேற்று களியக்காவிளை வந்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச சதி

தமிழகத்தில் சமீபகாலமாக பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது. எனவே திறமையான அதிகாரிகளை நியமித்து பயங்கரவாதத்தின் ஆணிவேரை கண்டுபிடித்து அகற்ற வேண்டும். இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story