நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி


நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 18 Jan 2020 10:15 PM GMT (Updated: 18 Jan 2020 8:05 PM GMT)

நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை கடைவீதி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி தீபக்குமாரி (வயது 36). இவர் நேற்று மதியம் வீட்டில் துணி துவைத்து வழக்கம்போல மாடியில் உள்ள துணி காய வைக்கும் கம்பியில் காய வைத்துள்ளார்.

அப்போது அந்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தீபக்குமாரியை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துணி காயவைக்கும் கம்பியில் அந்த வழியாக சென்ற மின்சார கம்பி உராய்ந்து மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story