திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை


திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 10 Feb 2020 10:15 PM GMT (Updated: 10 Feb 2020 6:31 PM GMT)

திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஒரு தம்பதியினர் ஒரு ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாகவும், மற்றொரு தம்பதியினர் தங்களுக்கு பிறந்த குழந்தையை வேறொருவருக்கு விற்றதாகவும் திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கும் தகவல் வந்தது.

இதையடுத்து போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தைகளை வாங்க, விற்க புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார்?, குழந்தைகளை விற்றது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் சிக்கினர்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். முழு விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாரணையில் உள்ள நபர்களின் விவரங்கள் தற்போது தெரிவிக்க இயலாது. நாளை (அதாவது இன்று) முழு விவரம் தெரிவிக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் போலீசாரின் பிடியில் 2 பேர் இருப்பதாகவும், அவர்கள் புரோக்கர்கள் என கூறப்படுகிறது. 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story