ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்


ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்
x
தினத்தந்தி 24 Feb 2020 9:30 PM GMT (Updated: 24 Feb 2020 9:21 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி, திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வக்கீல் ஏ.கே.சீனிவாசன் தங்க மோதிரம் அணிவித்தார். நாங்குநேரி ஏமன்குளம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நடராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நாங்குநேரி நகர செயலாளர் பரமசிவன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபால், உருமன்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பொன் இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பில் பல்வேறு ஊர்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகத்தையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, ஒன்றிய பேரவை செயலாளர் அசோக்குமார், மூலைக்கரைப்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முத்துராமலிங்கம், மாநில திட்டக்குழு உறுப்பினர் வி.ஓ.கணபதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story