ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 12:00 AM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் மராட்டியம் தான் கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

நேற்று முன்தினம் வரை இந்த கொடிய நோய்க்கு 74 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நோயின் தாக்கம் குறையாதா? என்று மக்கள் ஏங்கி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 23 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது மருத்துவ பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது. புதிய நோயாளிகளில் 17 பேர் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியிலும், 4 பேர் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்பூர் தாலுகாவிலும், புனே மற்றும் சத்தாரா ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும்சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மராட்டியத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story