தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்


தேனியில் இருந்து  பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்
x
தினத்தந்தி 25 May 2020 5:47 AM GMT (Updated: 25 May 2020 5:47 AM GMT)

தேனி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.


தேனி,

தேனி மாவட்டத்தில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 4,125 பேர் தங்கி இருந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த 180 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், பீகார் மாநிலத்தை சேர்ந்த 256 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 24 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். 4-வது கட்டமாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 688 பேர் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 5-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 120 பேர் நேற்று தேனியில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேனியில் இருந்து 4 பஸ்களில் அவர்கள் மதுரை ரெயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்து ரெயில் மூலம் பீகாருக்கு புறப்பட்டனர். அவர்களை வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் தேனியில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.

Next Story