சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Oct 2020 12:09 AM GMT (Updated: 6 Oct 2020 12:09 AM GMT)

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

சுரண்டை,

தென்காசி மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன் தலைமையில், தாசில்தார் முருகு செல்வி முன்னிலையில் நடந்தது.

இதில் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். மேலும் சுரண்டை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தெருநாய்கள் மக்களை அச்சுறுத்துவதை தடுக்க கோரியும், சுரண்டையில் யூனியன் அலுவலகம் அமைக்க கோரியும், பலபத்திரராமபுரம் கிராமம் மருதாதத்தாள்புரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க கோருதல் இலவச வீட்டுமனை பட்டா கேட்டல் உட்பட 23 மனுக்கள் பெறப்பட்டன.

வாரந்தோறும்...

இம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கூறுகையில்,‘ மனுக்கள் தென்காசி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும்’ என்றார். முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story