ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7,500-ஐ தாண்டியது


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7,500-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 7 Oct 2020 12:12 AM GMT (Updated: 7 Oct 2020 12:12 AM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 500-ஐ தாண்டியது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 557 ஆக உயர்ந்தது.

ஈரோடு மாநகராட்சி, சித்தோடு, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்ட இடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

95 பேர் பலி

அதேசமயம் நேற்று 116 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்கள். இதனால் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 422 ஆக உயர்ந்தது. இதுவரை 1,040 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 95 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story