கன்னடர்களுக்கு இலவச தடுப்பூசி கிடைக்காதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு,
பீகாரில் தேர்தல் முடிவை பொறுத்து இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த தொற்று நோய் மத்திய அரசுக்கு ஒரு கவலையாக இருக்க வேண்டாமா?. இதுபற்றி பிரதமர் என்ன சொல்ல வேண்டும்?. கர்நாடகத்தில் தற்போதைக்கு சட்டசபை தேர்தல் இல்லை. அதனால் கன்னடர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்காதா?.
கன்னடர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் என்று தைரியமாக கேட்க கர்நாடகத்தில் 25 பா.ஜனதா எம்.பி.க்கள், முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு முதுகெலும்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அல்லது பா.ஜனதா தலைவர், சட்டசபை தேர்தலுக்கு வழிவகுப்பாரா?. இலவச கொரோனா தடுப்பூசி என்று அரசு அறிவிக்கும் என்ற அறிவிப்புக்காக கன்னடர்கள் காத்திருக்கிறார்கள்.
வாக்குறுதி அளிப்பாரா?
பிரதமர் மோடி சார்பில் கர்நாடக பா.ஜனதா தலைவர் மக்களுக்கு உறுதி அளிப்பாரா?. அல்லது எடியூரப்பா அரசுக்கு எதிராக சதிசெய்து கவிழ்த்துவிட்டு, அடுத்து வரும் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா தலைவர் வாக்குறுதி அளிப்பாரா?.
சிட்கோவின் முன் அனுமதி பெறாமல், மா.சுப்பிரமணியன் விதிகளுக்கு புறம்பாக வீட்டை இடித்துக்கட்டியது தவறா? இல்லையா? என்று சைதை துரைசாமி மீண்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தொகுதி முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
போலீசில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.