நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 28 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 28 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Nov 2020 12:20 AM GMT (Updated: 20 Nov 2020 12:20 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் 4 பேர், பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேர் ஆவர். இது தவிர மானூர், பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மாதேவி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,663-ஆக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, மேலநீலிதநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,962-ஆக உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,507-ஆக உள்ளது. இதில் 15,212 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 160 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

Next Story