போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளா் கைது


போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளா் கைது
x
தினத்தந்தி 13 Jan 2021 2:09 AM GMT (Updated: 13 Jan 2021 2:09 AM GMT)

போதைப்பொருள் வழக்கில் பிரபல பான் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை, 

மும்பையின் கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் பிரபல பான் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பல சினிமா பிரபலங்களும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இங்கிலாந்தை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து 200 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது போதைப்பொருள் கும்பலுடன் பிரபல பான் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ராம்குமார் திவாரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ராம்குமாா் திவாரிக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதில் நேற்று முன்தினம் அவரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விசாரணைக்கு பிறகு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

பிரபல பான்கடை உரிமையாளர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story