ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்


ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 4:22 AM GMT (Updated: 14 Jan 2021 4:22 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை, 

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனுமன் தீர்த்தம் அனுமந்த் ஈஸ்வரர் கோவிலில் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டர் செல்லக்குமார் பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காட்டேரி ஊராட்சி தாதனூர் நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்களுக்கு இனிப்பு, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள் தொகுப்பை வழங்கினர். விழாவிற்கு காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், வட்டார தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் விஜயகுமார், வட்டார பொருளாளர் திருமால், முன்னாள் வட்டாரத் தலைவர் அயோத்தி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு அப்துல்கனி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினர்.

Next Story