திருப்பூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று


திருப்பூர் மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Feb 2021 4:08 PM GMT (Updated: 17 Feb 2021 4:08 PM GMT)

10 பேருக்கு கொரோனா

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 17,853 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 109 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60 வயது ஆண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தற்பொழுது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 223 ஆக உள்ளது.


Next Story