ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்
x
தினத்தந்தி 4 April 2021 3:39 AM GMT (Updated: 4 April 2021 3:39 AM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வத்திராயிருப்பு ஒன்றியம் போன்ற பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது.

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் மாதவராவுக்கு ஆதரவாக அவரது மகள் திவ்யா மாதவராவ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் வத்திராயிருப்பு ஒன்றியம்போன்ற பகுதிகளில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அவர் பேசியதாவது. ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களுக்காக சேவை செய்வதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவதற்கும் எனது தந்தை மாதவராவ் ஏராளமான திட்டங்களை வைத்துள்ளார் எனவே கை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் அவரது சட்டமன்ற உறுப்பினர் தொகை முழுவதையும் திருவில்லிபுத்தூர் மக்களின் நல திட்டத்திற்கு செலவழிப்பார் எனவே அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்று பேசினார் மேலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மசூதிகள் போன்ற பகுதிகளிலும் மத தலைவர்களை சந்தித்து சமுதாய பெரியோர்கள் சந்தித்து ஆதரவு கோரினார்.

Next Story