மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 6:24 PM GMT (Updated: 20 July 2021 6:24 PM GMT)

மன்னார்குடியில் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய உள்ளதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினர் மன்னார்குடி பூக்கொல்லை ரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர் சங்க திருச்சி மண்டல செயலாளரும், அனைத்து இந்திய மின் வாரிய பட்டய பொறியாளர்கள் சம்மேளன தென் மண்டல தலைவருமான சா.சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு

இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் காளிதாஸ், சம்மேளன திட்ட செயல் தலைவர் த.ராஜகோபால், கோட்ட செயலாளர் ஜெயபால், ஐக்கிய சங்க பிரதிநிதி முத்துமாணிக்கம் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மின் வாரியம் தனியார்மயமாவதை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story