நீர்நிலைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க கடும் நடவடிக்கை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


நீர்நிலைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க கடும் நடவடிக்கை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 26 Sep 2021 1:27 PM GMT (Updated: 26 Sep 2021 1:27 PM GMT)

நீர்நிலைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க கடும் நடவடிக்கை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ‘ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது’ என்று தெரிவித்தார்.

Next Story