திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி


திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Oct 2021 12:38 PM GMT (Updated: 4 Oct 2021 12:38 PM GMT)

திருவள்ளூர் அருகே லோடு ஆட்டோ மோதி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவர் கட்டிட தொழிலாளி. இந்த நிலையில் இவர், கடந்த 1-ந் தேதியன்று வேலையை முடித்துவிட்டு தனது வீடு நோக்கி திருப்பாச்சூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லோடு ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கலையரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவு குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story