நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை


நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 9 Dec 2021 12:09 AM GMT (Updated: 9 Dec 2021 12:09 AM GMT)

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 32). இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

தமிழரசனுக்கு, சபரிதா (28) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த 6 மாதமாக தமிழரசன்-சபரிதா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இந்த வீட்டில் கணவன்-மனைவிபோல் சோ்ந்து வாழ்ந்து வந்தனர்.

கழுத்தை நெரித்து கொலை

சபரிதா, செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழரசனுக்கு சபரிதா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தமிழரசன், நேற்று காலை சபரிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சபரிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தமிழரசனை தேடி வருகின்றனர். தமிழரசன் மீது மீஞ்சூர், காட்டூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி ஆகிய வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story