பரமத்திவேலூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


பரமத்திவேலூர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2022 6:22 PM GMT (Updated: 19 April 2022 6:22 PM GMT)

பரமத்திவேலூர் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்:
ரேஷன் அரிசி பறிமுதல்
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியபிரபு, செல்வராஜ், போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் பரமத்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள ஒழுகூர்பட்டி பகவதி அம்மன் கோவில் பின்புறம் விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை செய்தபோது, 24 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஏற்றி செல்ல அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து பதுக்கியது, இருக்கூர் அருகே உள்ள பஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்தது. 
இது தொடர்பாக அவர் மீது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Next Story