மகாராஷ்டிராவில் கலவரம்; 144 தடை உத்தரவு, இணைய சேவைகள் நிறுத்தம்
மகாராஷ்டிராவில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. #MaharashtraRiots
அவுரங்காபாத்,
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவுரங்காபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. 50க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தால் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதனால் தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவுரங்காபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பல கடைகள் மற்றும் வாகனங்கள் தீக்கு இரையாகியது. 50க்கும் மேற்பட்ட கடைகள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தால் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். இதனால் தற்போது அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story