ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது


ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 10:11 PM GMT (Updated: 11 Aug 2018 10:11 PM GMT)

குஜராத்தில் ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜ்கோட்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

லலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.


Next Story