தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது - வாஜ்பாய்


தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது - வாஜ்பாய்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:00 PM GMT (Updated: 16 Aug 2018 10:01 PM GMT)

தினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் (1-05-2004), தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது என வாஜ்பாய் கூறினார்.


கேள்வி:- தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இங்கும் மற்றும் தென் மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதில் உங்கள் கண்ணோட்டம் என்ன?

பதில்:- தமிழ்நாட்டிலும் மற்றும் தென் மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு காலத்தில், பாரதீய ஜனதா வட இந்திய கட்சியாக கருதப்பட்டது. இப்போது அந்த நிலைமை இல்லை. கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி நல்ல வெற்றியைப் பெறப்போகிறோம். தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நாங்கள் வலுவான கூட்டணியை அமைத்து இருக்கிறோம்.

கேரளாவிலும் எங்கள் கணக்கை தொடங்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். கணிசமான தமிழர்கள் மக்கள் தொகை உள்ள இந்தியாவின் தென்கோடியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் எங்களுக்கு ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இங்குள்ள அனைத்து பிரிவு மக்களின் நல்லெண்ணத்தையும் பா.ஜ.க. பெற்றுள்ளது. எங்களுடைய வளர்ச்சி திட்டத்தில் நாங்கள் எங்கள் கூட்டணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க. நிச்சயமாக வளர்ந்துள்ளது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண் டும். எங்கள் தொண்டர்களும், மாநில அளவிலான தலைவர்களும் கடுமையாக பாடுபடுகிறார்கள். அவர்கள் மேலும் தங்கள் முயற்சிகளை முறையாக உறுதியான முறையில் அதிகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

Next Story