பந்திப்போரா என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


பந்திப்போரா என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 30 Aug 2018 7:27 AM GMT (Updated: 30 Aug 2018 7:27 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திப்போரா என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் ஹஜின் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி, ''ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்தைச் சுற்றிவளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதி கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை  கண்ணீர் புகை குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் கலைத்தனர். 

Next Story