உத்தர பிரதேசத்தில் 1,398 விவசாயிகளின் கடன்களை அடைத்த நடிகர் அமிதாப் பச்சன்
உத்தர பிரதேசத்தில் 1,398 விவசாயிகளின் கடன்களை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அடைத்துள்ளார்.
மும்பை,
இந்தி திரையுலகின் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அறியப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன் (வயது 76). இவர் உத்தர பிரதேசத்திலுள்ள விவசாயிகளில் 1,398 பேரின் வங்கி கடன்களை அடைத்து உள்ளார்.
இதுபற்றி தனது பிளாக்கில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து விவசாயிகளை பாதிக்கும் சுமைகளில் சிலவற்றை போக்கும் விருப்பத்தில் பெருமை அடைகிறேன்.
முதலில் மகாராஷ்டிர விவசாயிகளில் 350 பேரின் கடன்களை அடைக்க பொறுப்பு எடுத்து கொண்டேன். இன்று உத்தர பிரதேச விவசாயிகள் வங்கிகளில் பெற்ற ரூ.4.05 கோடி கடன் தொகையை செலுத்தவுள்ளேன். விருப்பம் முழுமை அடையும்பொழுது உள்ளே அமைதி உருவாகிறது என தெரிவித்துள்ளார்.
வங்கி கடிதங்களை பெறுவதற்காக 70 விவசாயிகளை தேர்வு செய்து மும்பைக்கு பயணம் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை தனிப்பட்ட முறையில் செய்துள்ளார்.
Related Tags :
Next Story