5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி - மு.க. ஸ்டாலின்


5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Dec 2018 2:03 PM GMT (Updated: 11 Dec 2018 2:03 PM GMT)

5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.  இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவாக முடிவுகள் அமைந்துள்ளது. சத்தீஷ்கார், ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறது. மத்திய பிரதேசத்திலும் ஆட்சி கையைவிட்டு நழுவுகிறது.  தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய மிகப்பெரிய அடி என கூறியுள்ளார். 

மு.க. ஸ்டாலின் பேசுகையில், 5 மாநில தேர்தலை பொறுத்தவரை மினி பார்லிமெண்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. வரும் 2019 தேர்தலில் முழுமையான வெற்றியாக வரும் என்று பார்க்கிறோம். பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. வளர்ச்சியான இந்தியாவை உருவாக்கப்போவதாக கூறினார். ஆனால் உருவாகவில்லை. பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லமாட்டோம். வெற்றி பெற்றவர்களுக்கு திமுக வாழ்த்தை தெரிவிக்கிறது என கூறியுள்ளார். 

Next Story