உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது


உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 23 Dec 2018 9:00 PM GMT (Updated: 23 Dec 2018 7:10 PM GMT)

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் ஒன்று தடம் புரண்டது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 20 பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் ஒன்று நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கார்தோய் மாவட்டம் பகாவுலி ரெயில்வே நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த ரெயில் தடம் புரண்டது.

இதனால் லக்னோ-மொராதாபாத் வழித்தடத்தில் செல்லும் பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. லக்னோ-டெல்லி வழித்தடத்தில் செல்லும் 8 ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் 36 ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதிஅடைந்தனர். தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story