அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி


அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
x
தினத்தந்தி 30 Dec 2018 5:56 AM GMT (Updated: 30 Dec 2018 5:56 AM GMT)

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கார் நிகோபர்,

பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் மற்றும் நிகோபர் தீவுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.  இதன் ஒரு பகுதியாக அவர் கார் நிகோபர் பகுதிக்கு சென்றார்.

அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுனாமி நினைவகத்தில் பிரதமர் மோடி மலரஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தியையும் ஏற்றினார்.

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது.  இதனால் இந்தோனேசியா, இந்தியா, அந்தமான் மற்றும் நிகோபர் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  பலர் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர்.

Next Story