ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்பொழிவு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது


ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்பொழிவு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது
x
தினத்தந்தி 5 Jan 2019 5:17 AM GMT (Updated: 5 Jan 2019 5:17 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பனிப்பொழிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு உள்ளது.  இதனால் அந்த வழியே சென்ற வாகனங்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.  சில வாகனங்கள் வேறு வழியில் செல்கின்றன.

Next Story