செயற்கைகோள் வீழ்த்தப்பட்ட சோதனை: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு


செயற்கைகோள் வீழ்த்தப்பட்ட சோதனை: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு
x
தினத்தந்தி 27 March 2019 9:55 PM GMT (Updated: 27 March 2019 9:55 PM GMT)

செயற்கைகோளை சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷவர்தன், சுரேஷ் பிரபு, ஸ்மிரிதி இரானி, முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story