ரிசர்வ் வங்கி பிப். 12-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
புதுடெல்லி,
தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.
2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய சுற்றறிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story