சத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


சத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 21 April 2019 9:59 PM GMT (Updated: 21 April 2019 9:59 PM GMT)

சத்தீஷ்காரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு நக்சலைட்டுகளும் திருப்பி சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story