தலைமை நீதிபதி மீது புகார் பற்றி சட்டப்படி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் தீர்மானம்


தலைமை நீதிபதி மீது புகார் பற்றி சட்டப்படி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் தீர்மானம்
x

தலைமை நீதிபதி மீது புகார் பற்றி சட்டப்படி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் தொந்தரவு புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மனு தாக்கல் செய்யும் உரிமை பெற்ற வக்கீல்கள் சங்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் ஊழியர் கொடுத்துள்ள புகார் பற்றி வழக்கமான முறையில் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமானது. அதேசமயம் புகார்தாரரின் உடனடியாக முழு அமர்வு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story