மாட்டு இறைச்சியை கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: 5 பேர் கைது


மாட்டு இறைச்சியை கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: 5 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2019 11:20 PM GMT (Updated: 25 May 2019 11:20 PM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற பெண் உள்பட 3 பேரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் ‘வைரல்’ ஆனது.

இந்தூர், 

மாட்டு இறைச்சியை கொண்டு செல்லும் 2 ஆண்களை 5 பேர் சுற்றி நின்று கோ‌ஷம் எழுப்பியபடி கம்பால் தாக்குகின்றனர். பின்னர் அந்த 2 நபர்களில் ஒருவரை அழைத்து அந்த பெண்ணை செருப்பால் அடிக்க வைக்கிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சம்பவம் சியோனி மாவட்டத்தில் நடந்தது என்பதும், தாக்குதல் நடத்தியவர்கள் பசு பாதுகாவலர்கள் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் தாக்குதல் நடத்திய 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளானவர்கள் லேசான காயமே அடைந்துள்ளதாகவும், மாநிலத்தில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து இருப்பதை மீறி சட்டவிரோதமாக அதை எடுத்துச் சென்றதால் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story