உத்தரகாண்டில் நிலச்சரிவு; துண்டிக்கப்பட்ட சாலை வழியே கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்


உத்தரகாண்டில் நிலச்சரிவு; துண்டிக்கப்பட்ட சாலை வழியே கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்
x
தினத்தந்தி 17 July 2019 12:38 PM GMT (Updated: 17 July 2019 12:38 PM GMT)

உத்தரகாண்டில் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை வழியே மாணவர்கள் சென்று கல்லூரியை அடைந்தனர்.

உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

இதில் முன்சியாரி நகரில் கோரிப்பூர் பகுதியில் நிலச்சரிவால் பெருங்கற்கள் உருண்டோடி சாலையில் விழுந்தன.  இதனால் அந்த வழியே செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து உச்சைதி நகரில் போதி கிராமத்தில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலை வழியே நடந்து சென்று தங்களது கல்லூரியை அடைந்தனர்.

Next Story