குடிநீருக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறோம்; முதல் மந்திரிக்கு குழந்தைகள் கடிதம்
குடிநீருக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்று குழந்தைகள் சிலர் தெலுங்கானா முதல் மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள அழகாபூர் நகரசபையை சேர்ந்த குழந்தைகள் சிலர், தங்களது பகுதிக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டு முதல் மந்திரி சந்திர சேகர் ராவுக்கு அஞ்சல் அட்டையில் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள், எங்களுக்கு குடிநீர் அடிப்படை தேவையாக இருக்கிறது. அதனை நீங்கள் வழங்க வேண்டும். ஐதராபாத் நகரில் ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளால் ஏரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன. 187 ஏரிகளே மீதமுள்ளன.
ஏரிகளில் உள்ள தண்ணீரும் கெட்டு போயுள்ளது. குடிநீருக்காக 5 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். எனவே, குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடிநீரை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story