கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி
கியாஸ் தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலியாயினர்.
வதோதரா,
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள கவசத் என்ற கிராமத்திற்கு அருகில் எய்ம்ஸ் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆக்சிஜன் கியாஸ் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலையில் நேற்று பகல் 11 மணி அளவில் பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சாவு எண்ணிக்கை அதிகமாகக்கூடும் என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள கவசத் என்ற கிராமத்திற்கு அருகில் எய்ம்ஸ் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆக்சிஜன் கியாஸ் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலையில் நேற்று பகல் 11 மணி அளவில் பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சாவு எண்ணிக்கை அதிகமாகக்கூடும் என்ற அச்சம் எழுந்து இருக்கிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story