3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வருகை


3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வருகை
x
தினத்தந்தி 21 Feb 2020 7:38 PM GMT (Updated: 21 Feb 2020 7:38 PM GMT)

3 சரக்கு விமானங்களில் டிரம்பின் ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருவிகள் இந்தியா வந்தன.

ஆமதாபாத்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற 24-ந் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியுடன் இணைந்து பிரமாண்ட ஊர்வலத்தையும் பார்வையிடுகிறார்.

இதையொட்டி கடந்த 4 நாட்களில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 சரக்கு விமானங்கள் ஆமதாபாத் வந்து சேர்ந்துள்ளன. இவற்றில் டிரம்ப் பாதுகாப்புக்கு தேவையான கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள், டிரம்பின் ‘மரைன் ஒன்’ என்ற ஹெலிகாப்டர், பெரிய கார் போன்றவை இந்த விமானங்களில் வந்து இறங்கியுள்ளன. இதுதவிர ஏராளமான பாதுகாப்பு வீரர்களும் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளனர்.

Next Story