காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ”கடந்த 2019-ஆம் ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா். பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்” என்றார்.
Related Tags :
Next Story